HI There, i transcribed the first link PFB the same.
இந்தக் காலத்துல எல்லாரும் யோசிக்கிற ஒரு விஷயம் என்னன்னா, நான் கஷ்டப் படவே கூடாது, ஆனா நான் நல்லாருக்கணும். நாம்ப வாழுற இந்தக் காலத்துல, இப்போ இருக்குற இந்த சூழ்நிலையில, எல்லோரும் யோசிக்கிற ஒரு விஷயம், நான் கஷ்டப்படவேக் கூடாது, ஆனா நான் நல்லாருக்கணும். நான் கஷ்டப்பட்டுப் படிக்கவே கூடாது, ஆனா நான் க்ளாஸ் ஃபர்ஸ்ட் வரணும், எனக்கு நல்ல வேலை கிடைக்கணும், நான் நல்லா சம்பாதிக்கணும். நான் ஒரு பிஸினஸ் ஆரம்பிப்பேன், அதுல முதல் மாசத்துல, நான் போட்ட காசு திரும்பத் தரணும், அப்புறம், கொஞ்ச நாள்ல நான் பெரிய ஆள் ஆகணும். எல்லோரும் யோசிக்கிற விஷயம் இப்படிதான் இருக்கு இந்த காலத்துல. வாழ்க்கைல முன்னேறுறது, அது ஒரு நாள் கூத்து இல்ல, அது ஒரு ஒரு நாளும் வளருற காரியம். ஒரு நாள் நைட்ல எக்ஸாமுக்குப் படிச்சு, பாஸ் வேணாலும் ஆகலாம். ஆனால், ஒரு நாள் நைட்ல படிச்சு நூத்துக்கு நூறு எடுக்க முடியாது. ஒரு நாள் ப்ராக்டிஸ் பண்ணி, இல்லாட்டி ஒரு வருஷம் ப்ராக்டிஸ் பண்ணி, ஸ்கூல்ல நடக்குற ஓட்டப் பந்தயத்துல வேணாலும் ஜெயிக்கலாம், ஆனா ஒலிம்பிக்ஸ்ல ஜெயிக்க முடியாது.
வாழ்க்கையும் அப்படிதான், எதுவும் சாதாரணமா நம்ப வாழ்க்கைல கிடைக்காது. இந்தக் காலத்துல எல்லாருக்கும் அலட்சியத்தனம், ரொம்ப அசால்ட்டா இருக்கறது. நீ கஷ்டப்பட மாட்ட, வேர்வை சிந்தி உழைக்க மாட்ட, தூங்குவ, டைமை வேஸ்ட் பண்ணுவ, ஆனா நீ நினைக்குறது உன் வாழ்க்கைல நடக்கணும். நீ நினைக்கிறது உன் வாழ்க்கைல நடக்கணும்னு நீ ஆசைப்பட்லாம், ஆனா அது நடக்காது. கஷ்டப்பட்டு, அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, மிதி வாங்கி, அடி வாங்கி, சொகுசா ஒருத்தன் வாழ்ந்தா, அந்த வாழ்க்கை நமக்கு வேணும், ஆனா அந்த கஷ்டம் நமக்கு வேண்டாம். குடும்பம் ந